நன்னெறி - சிவப்ரகாச ஸ்வாமிகள் - 40
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!
பொருள்: மின்னொளி போன்ற ஜடாமுடிகளைக் கொண்ட
விநாயகரைத் தொழ நன்னெறி வெண்பா நாற்பதும் பாட வருமே.
1. என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.
பொருள்: மலர் சூடிப் பொலியும் பெண்ணே! நம் அழகிய கை
புகழ்ச்சிக்காக சென்று சுவையான உணவை நாவிற்குக் கொடுத்து
உதவுவதில்லை. அது போல தீதில்லாத நல்லவர்களும் தம்மை
என்றும் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களுக்கும் சென்று பொருள்
கொடுத்து உதவுவர்.
2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு.
பொருள்: அழகிய நெற்றியை உடையவளே! குற்றமில்லாதவர் கூறும்
கடுஞ்சொற்களும் இனிது. மற்றவர் பேசும் உற்றதான இனிய
சொற்களும் கெடுதே. ஈசன் நல்லவனான சாக்கிய நாயனார் எறிந்த
கற்களை விரும்பினாரே அன்றி, கரும்பு வில்லால் மன்மதன் எறிந்த
மலர் அம்புகளை விரும்பவில்லை.
3. தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.
பொருள்: அழகிய கொங்கையை உடையவளே! பசுவின் பால்
வேண்டுமென்றால் அதற்குப் பிடித்த அதன் கன்றின் உதவியோடு
கறந்து கொள்வது போல், நமக்கு உதவாதவரிடமிருந்து ஒன்றைப்
பெற வேண்டுமென்றால், அவர்க்குப் பிடித்தவரின் உதவியால்
அதைப் பெற்றிட வேண்டும்.
4. பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
பொருள்: எவர்க்கும் உதவாத கருங்கடலின் நீரை புயல் மேகங்கள்
முகந்து சென்று எப்படி மழையாக எவர்க்கும் கொடுத்து
விடுகிறதோ, அது போல பிறர்க்கு உதவாதவர் பெரும்
செல்வத்தையும், எவர்க்கும் உதவுபவர் எடுத்துக் கொள்வர்.
5. நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம்.
பொருள்: பூங்குழலை உடையவளே! நெல்லிலிருந்து பிறிந்த உமி
மீண்டும் அதனோடு சேர்ந்தாலும் முன்புபோல் திடமாக இருக்காது.
அது போலவே பிறிந்த இருவர் மீண்டும் சேர்ந்தாலும் அந்த நட்பு
அற்பமாகவே இருக்கும்.
6. காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகருமம் செய்யவே - ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண்.
பொருள்: கூறப்படும் பதினாறு கலைகளும் பொருந்திய நிலவு
போன்ற முகத்தவளே! இரண்டு கண்களும் ஒன்றையே பார்ப்பது
போல், அன்பான கணவன் மனைவியும் ஒருமித்து தீதில்லாத ஒரு
கருமத்தையே செய்வார்கள்.
7. கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
பொருள்: பெரிதாக முழங்கிக் கொண்டிருந்த குளிர்ந்த கடல் நீரை
முனிவர்க்கெல்லாம் அரசராகிய அகத்தியர் தம் கையாலேயே
குடித்து வற்றச் செய்து விட்டார். எனவே நாம் கற்ற கல்வி கடல்
போன்றதானாலும், கர்வம் வந்து விட்டால் அது ஆண் சிங்கம்
போன்று நம்மைத் தள்ளி விடும்.
8. உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு?
பொருள்: திரண்டு வரும் வெள்ளத்தை எப்போதும் கடந்து விடாமல்
கரையானது காத்து விடும், கரையைத் தாண்டி வெள்ளம் ஊருக்குள்
புகுவது என்பது அரிதானது. அது போல உள்ளத்திலிருந்து
பொங்கிவரும் கோபத்தை மனத்தில் அடக்கிக் கொள்வதே சிறந்த
குணம்.
9. மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து.
பொருள்: அன்பர்கள் படைக்கும் பலியை ஏற்றுக்கொள்ளும் சிவனது
விரிந்த சடையின் மேல் இருக்கும் பாம்பு, படர்ந்த சிறகுடைய
கருடனைப் பார்த்து அஞ்சாது. அது போல மெலிந்தோர்
வலிந்தோரை அண்டி விட்டால், பலம் மிகுந்த தன் எதிரியிடம்
பயப்படத் தேவையில்லை.
10. தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று.
பொருள்: நிலவானது தன்னிடமிருக்கும் கறையான இருளை நீக்கிக்
கொள்வது பற்றி நினைக்காது, மேலே நின்று உலகில்
படர்ந்திருக்கும் இருளைப் போக்கவே நினைக்கும். அது போலவே
உயர்ந்தோரும் தன் குறைகளையும், கஷ்டங்களையும் பற்றி
நினையாது, தளர்ந்து தன்னிடம் வந்து பிறர்க்கூறும் கஷ்டங்களைத்
தீர்த்து வைப்பர்.
11. பொய்ப் புலன்கள் ஐந்து நோய் புல்லியர் பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும் கொல் கல்தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.
பொருள்: சூறாவளியால் சிறு துரும்பை சுழற்றித் தூக்கி எறிய
முடியுமே அன்றி கல்தூணிடம் அதன் பலம் செல்லாது.
அதுபோலவே பொய்யான நமது ஐம்புலன்களும் மெலிந்தோரிடமே
துன்பங்களை உண்டாக்குமே அன்றி மெய்யறிஞர்களை அதனால்
ஒன்றும் செய்து விட முடியாது.
12. வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு.
பொருள்: திருத்தமான அணிகலன்களை உடையவளே! குளிர் நீர்
பொத்தல் உள்ள குடத்தில் நிற்காது வெளியே ஒழுகிவிடுவது
வியப்பல்ல, அந்த ஓட்டைக்குடத்திலேயே அது தங்கியிருந்தால்
அதுவே வியப்பு. அது போல ஒன்பது ஓட்டைகளுள்ள இந்த
உடம்பில் வெளியேறிவிடாமல் உயிர் இருந்து கொண்டிருக்கிறதே
அதுவே வியப்பு.
13. பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்ற முலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
பொருள்: மலைபோன்ற கொங்கைகளை உடையவளே! நிலவின்
கிரணங்கள் அதன் கலைகளைப் பொறுத்து ஏறி, இறங்கும். அது
போலவே மேலோர், கூடிக், குறையும் தன் செல்வச் செழிப்பை
ஒட்டி விருப்பத்தோடு பிறர்க்கு உதவுவர்.
14. தொலையாப் பெரும் செல்வந் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் இலையால்
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈரங்கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.
பொருள்: ரீங்காரம் செய்யும் வண்டு மொய்க்கும் மலர்களை
அணிந்தவளே! தொலையாத செல்வத்தை மேரு மலையை விட
அதிகமாக சேர்த்து விட்டோம் என்று செருக்கு மேலோரிடம்
இருப்பதில்லை.
15. இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழியிலார்க்கு ஏதுமுது நூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு.
பொருள்: நல்ல குணமுடையவளே! ஊமைகளுக்கு பழம்பெரும்
நூல்களால் என்ன பயன்? குருடர்களுக்கு விளக்கால் என்ன
பயன்? அது போலவே அன்பு இல்லாதவர்க்கு இங்கு இடம்,
பொருள், ஏவல், இன்னும் மற்றெதெல்லாம் இருந்தும் என்ன பயன்?
16. தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.
பொருள்: கடலானது தன்னை அடுத்த உப்பங்கழியிலும் பாய்வது
போல, உயர்ந்தோர் மதியாதவராயினும், இழிந்தவராயினும் தன்னை
அண்டினவரை தன்னையும், தன் நிலையையும் ஆராய்ந்து அவர்
தம் துன்பம் தீர்ப்பர்.
17. எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்றவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ!
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி.
பொருள்: பசும்பொன்னாலான வளையல்களை அணிந்தவளே!
வாழ்ந்திருந்து எல்லாருக்கும் உதவி, அழிந்த வாழையின் கீழ்
தோன்றிய அதன் கன்றும் எல்லாருக்கும் கனி, காய், இலை, தண்டு
இவைகளைத் தந்து உதவவே செய்யும், அது போலவே பிறர்க்குக்
கொடுத்து வறுமை எய்திய தகப்பனுக்குத் தோன்றிய மைந்தர்களும்
ஈகை குணத்தோடே இருப்பர்.
18. இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன் செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல்.
பொருள்: பொன்னால் செய்த, ஒலிக்கும் வளையல்களை
உடையவளே! வெம்மையான கதிர்களை உடைய சூரியன் வரவால்
கடல் பொங்குவதில்லை, குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரன்
வரவாலேயே மகிழ்ந்து பொங்குகிறது. அது போலவே நீரால்
சூழப்பட்ட இவ்வுலகும் இன்சொல்லாலேயே மகிழுமே அன்றி,
வன்சொல்லால் மகிழாது.
19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண்டு இன்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவர்- வல்லோர்
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர.
பொருள்: தென்றல் வரும்போது தளிர் காட்டி மலர்ந்து வளரும்
தேங்கனிகளைக் கொண்ட மாமரம், சுழல் காற்று வந்தால் வருந்தும்.
அது போல வல்லவர்களும் நல்லோர் வரவால் மலர் முகம்
கொண்டு மகிழ்வர், மற்றோர் வந்தால் புழுங்குவர்.
20. பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
பொருள்: தேர்ந்தெடுத்த அணிகளை அணிந்திருப்பவளே! முற்றிய
நோயால் வருந்தும் பிற உறுப்புகளைக் கண்டு நீர் சொரியும் கண்
போல, பெரியோர் பிறர் படும் கஷ்டங்களைக் கண்டு
நெருப்பிலிட்ட நெய் போல் உருகுவர்.
21. எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம் - எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை.
பொருள்: கற்றோர் ஆராய்ந்து தேடும் சிவபெருமானின்
ஜடாமுடியைக் கண்டதும் கங்கையின் பெருக்கு ஒடுங்கி விடுவதைப்
போல, மெய் ஞானியர் முன் ஏனையோர் கற்ற கல்வி அனைத்தும்
இல்லாது போய் விடும்.
22. ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க - நீக்கு
பவர் யார்? அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு.
பொருள்: பாம்பிடம் தோன்றிய மணி என்றும், பாற்கடலில்
தோன்றிய விஷம் என்றும் கொள்வார் எவருமிலர். எனவே
உயர்த்துகின்ற அறிவைக் கொள்ளாது பிறப்பினால் உயர்வு தாழ்வு
பார்க்க வேண்டாம்.
23. பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்! பலகால்
எறும்பு ஊரக் கல் குழியுமே!
பொருள்: பூரித்திருக்கும் தனங்களை உடையவளே! பலகாலம்
எறும்பு ஊரக் கல் குழிந்து விடும். அது போல ஆண்களுடன்
பேசிக் கொண்டிருந்தாலே, பெண்களுக்குப் பெருமையளிக்கும் கற்பு
எனும் நோன்பு கொள்ளும் நெஞ்சுறுதி தளர்ந்து விடும்.
24. உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி.
பொருள்: செழித்திருக்கும் சோலைப்பூக்களை வண்டு போய்ச்
சேரும், ஆனால் காக்கை வேப்பம்பழத்தையே விரும்பும்.
அதுபோல ஒருவரிடம் குணம் இருந்தாலும் கீழோர் பெரிதாகக்
கூறுவது அவர் குற்றங்களையே.
25. கல்லா அறிவிற் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புனையில் புகும் ஒண் பொருள்.
பொருள்: வில் போன்ற புருவங்களை உடைய கரு விழியாளே!
பெரும் பாரமுள்ள பொருளும், தெப்பத்தில் சேர்ந்தால் தன் வலிமை
குறைந்து விடுவதைப் போல, கல்வியறிவு இல்லாத கீழோரிடம்
சேர்ந்த உயர்ந்தோர் பெருமையும் வலுவில்லாததாகி விடும்.
26. உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவாயிற்றோ விளம்பு.
பொருள்: மடந்தையே! கதிரவனின் ஒளியின் அளவு நம் கண்
அளவா அல்லது விண் அளவா கூறு. அது போலவே
புலவர்களும் ஒருவர் உடல் சிறுமையைக் கொண்டு அவர்கள்
கல்விக் கடலின் அளவை அலக்ஷ்யம் செய்யார்.
27. கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.
பொருள்: முளைக்கும் பற்களானது கடினமான பொருள்களையும்
தான் மென்று நல்ல சுவையை நாவிற்குக் கொடுக்கும். அது
போலவே கற்றோரும் தன் மெய் வருத்தி, ப்ரதியுபகாரம் கருதாது
பிறர்க்கு உதவிடுவர்.
28. முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனி விளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை.
பொருள்: நன்கு பழுக்காத காயாக இருந்தாலும் வாழை
உணவுக்காகும். பழுத்திருந்தாலும் எட்டி உணவுக்காகுமோ சொல்.
அது போலவே கற்றோர் தம்மிடம் கோபம் கொண்டோருக்கும்
கொடுப்பர், ஆனால் மற்றோர் அவரிடம் கனிவாகப்
பேசுபவருக்கும் எதையும் கொடுக்க மாட்டார்.
29. உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடியாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதிமான்.
பொருள்: இசையை ஒத்த குளிர்ந்த பேச்சுடையவளே! நிலவில்
இருக்கும் மான் பூமியில் இருக்கும் புலிக்கு அஞ்சுமோ? அது
போல நெஞ்சத்தை உயர்ந்த பரம்பொருளிடம் வைத்தோர் உடலுக்கு
ஒரு கோடி துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும் கவலைப்பட
மாட்டார்கள்.
30. கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு.
பொருள்: வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டு வைக்காதவர்
பெருக்கெடுத்து வெள்ளம் வரும்போது என்ன செய்வார் கூறு. அது
போலவே உயிரைக் கொள்ளும் யமன் வருவதற்கு முன்பே
மனங்கனிந்து அறம் செய்து பிழைத்துக் கொள்ள வேண்டும்.
31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேல்
கை சென்று தாங்கும் கடிது.
பொருள்: பொருந்திய அணிகளை உடையவளே! உடலின் மேல்
பெரிய குச்சியின் அடி விழுவதற்கு முன் கையானது விரைந்து
சென்று தன் மேல் வாங்கிக் கொள்ளும். அது போல
பேரறிஞர்களும் பிறர் துன்பங்களைத் தாங்க வீரத்தோடு விரைவார்.
32. பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ் ஒன்று உயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான்.
பொருள்: வைரம் பாய்ந்த திண்மை கொண்ட உயர்ந்த கதவும்
தாழ்ப்பாள் இல்லையென்றால் வலுவில்லாததே. நன்னெறிகளை
உடையவளே! அது போல சொல்லப்படும் நூல்களின் பயனை
அறியாதவர் செய்யும் அறங்களும் பயனற்றதே.
33. எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல்.
பொருள்: நாம் கட்டும் குளத்திற்கு நீர் தளும்பாது இருக்க கரை
கட்டுகிறோம். ஆனால் கடலுக்குக் கரை கட்டுவதில்லை. அது
போல நம்மை தூற்றாதிருப்பதற்காக இழிந்தவர்களைப் போற்றிக்
கொண்டிருக்கலாம். ஆனால், குறைவற்ற அறிவுடையோருக்கு
அந்த போற்றுதல் தேவையில்லை.
34. அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.
பொருள்: பிறை போன்ற நெற்றியை உடையவளே! அழகு தரும்
ஒளி பொருந்திய விழி இருளைக் கண்டு அஞ்சும். குருட்டுக் கண்
இருளுக்குப் பயப்படுவதில்லை. அது போல அறிவுடையோர்
அன்றி அறிவு இல்லாதவர் தம்மைச் சேரும் பழியைக் கண்டு அஞ்ச
மாட்டார்.
35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்.
பொருள்: வெற்றிதரும் நீண்ட வேல், என்னைப் பழிக்காதே என்று
வேண்டிக்கொள்ளும் விழியாளே! வாழைப்பழம் பாலை வேண்டும்,
புளியம்பழம் பாலை விரும்புவதில்லை. அது போல மேன்மக்களே
கற்றோரை விரும்புவர், மற்றவர் மதிப்பதில்லை.
36. தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய்.
பொருள்: எப்போதும் நெல்லுக்கு நீரை இறைப்போமே அன்றி
காட்டில் வளரும் புல்லுக்கு இறைப்பதில்லை. அது போல
உயர்ந்தோர் தகுதியுள்ளோருக்கே உதவுவர்.
37. பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் சொல்
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
பொருள்: லக்ஷ்மிதேவியை அழகில் வென்றவளே! அகஸ்திய
முனிவர் முன் உயர்வு பேசிய விந்திய மலை அன்று தாழ்ந்து
போயிற்று. அது போல பெரியோர் முன் தன்னைப் புகழ்ந்து
பேசிக்கொள்ளும் மூடனும் உயர்வு நீங்கித் தாழ்வான்.
38. நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய் முற்றின் தின்தீங் கனியாம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம்.
பொருள்: நல்லவளே கேள்! காய் முற்றினால் உண்பதிற்கு இனிய
கனியாகும். இளந்தளிர் முற்றி என்ன ஆகப்போகிறது? அது
போல நல்லோர் சேர்க்கை நாள்தோறும் நல்லதே. ஆனால் தீயோர்
சேர்க்கை அப்படி ஆகாது.
39. கற்று அறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே - பொற்றொடீஇ
சென்று படர்ந்த செழுங்கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
பொருள்: பொன் வளையல்களை அணிந்தவளே! சென்று படர்ந்த
செம்மையான கொடியில் மலர்ந்த மலருக்கு மலர்ந்த ஒரு தினமே
மணமிருக்கும். அது போல கல்லாதோரோடு செய்யும் ஆழ்ந்த
நட்பும் சேர்ந்து இருந்தாலும் தீமையையே கொடுக்கும்.
40. பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்.
பொருள்: பொன் போன்றவளே! மின்னும் அணிகலன்களை
அணிந்திருந்தாலும் எந்த உறுப்புகளும், எதையும் அணியாத
கண்ணுக்கு ஒப்பாவதில்லை. அது போலவே பொன் அணியும்
வேந்தர்களும் அதை அணியாத பெருங்கல்வி உடைய அறிஞருக்கு
ஒப்பாகார்.
மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே!
பொருள்: மின்னொளி போன்ற ஜடாமுடிகளைக் கொண்ட
விநாயகரைத் தொழ நன்னெறி வெண்பா நாற்பதும் பாட வருமே.
1. என்றும் முகமன் இயம்பாதவர் கண்ணும்
சென்று பொருள் கொடுப்பர் தீது அற்றோர் - துன்றுசுவை
பூவின் பொலி குழலாய்! பூங்கை புகழவோ
நாவிற்கு உதவும் நயந்து.
பொருள்: மலர் சூடிப் பொலியும் பெண்ணே! நம் அழகிய கை
புகழ்ச்சிக்காக சென்று சுவையான உணவை நாவிற்குக் கொடுத்து
உதவுவதில்லை. அது போல தீதில்லாத நல்லவர்களும் தம்மை
என்றும் திரும்பிக்கூடப் பார்க்காதவர்களுக்கும் சென்று பொருள்
கொடுத்து உதவுவர்.
2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்
பேசுஉற்ற இன்சொல் பிறிது என்க - ஈசற்கு
நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கரும்பு
வில்லோன் மலரோ விருப்பு.
பொருள்: அழகிய நெற்றியை உடையவளே! குற்றமில்லாதவர் கூறும்
கடுஞ்சொற்களும் இனிது. மற்றவர் பேசும் உற்றதான இனிய
சொற்களும் கெடுதே. ஈசன் நல்லவனான சாக்கிய நாயனார் எறிந்த
கற்களை விரும்பினாரே அன்றி, கரும்பு வில்லால் மன்மதன் எறிந்த
மலர் அம்புகளை விரும்பவில்லை.
3. தங்கட்கு உதவிலர் கைத்தாம் ஒன்று கொள்ளின் அவர்
தங்கட்கு உரியவரால் தாம் கொள்க - தங்க நெடும்
குன்றினால் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினால் கொள்ப கறந்து.
பொருள்: அழகிய கொங்கையை உடையவளே! பசுவின் பால்
வேண்டுமென்றால் அதற்குப் பிடித்த அதன் கன்றின் உதவியோடு
கறந்து கொள்வது போல், நமக்கு உதவாதவரிடமிருந்து ஒன்றைப்
பெற வேண்டுமென்றால், அவர்க்குப் பிடித்தவரின் உதவியால்
அதைப் பெற்றிட வேண்டும்.
4. பிறர்க்கு உதவி செய்யார் பெரும் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.
பொருள்: எவர்க்கும் உதவாத கருங்கடலின் நீரை புயல் மேகங்கள்
முகந்து சென்று எப்படி மழையாக எவர்க்கும் கொடுத்து
விடுகிறதோ, அது போல பிறர்க்கு உதவாதவர் பெரும்
செல்வத்தையும், எவர்க்கும் உதவுபவர் எடுத்துக் கொள்வர்.
5. நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர் பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமை போல்
புல்லினும் திண்மை நிலை போம்.
பொருள்: பூங்குழலை உடையவளே! நெல்லிலிருந்து பிறிந்த உமி
மீண்டும் அதனோடு சேர்ந்தாலும் முன்புபோல் திடமாக இருக்காது.
அது போலவே பிறிந்த இருவர் மீண்டும் சேர்ந்தாலும் அந்த நட்பு
அற்பமாகவே இருக்கும்.
6. காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதில் ஒருகருமம் செய்யவே - ஓது கலை
எண்இரண்டும் ஒன்றுமதி என் முகத்தாய் நோக்கல்தான்
கண்இரண்டும் ஒன்றையே காண்.
பொருள்: கூறப்படும் பதினாறு கலைகளும் பொருந்திய நிலவு
போன்ற முகத்தவளே! இரண்டு கண்களும் ஒன்றையே பார்ப்பது
போல், அன்பான கணவன் மனைவியும் ஒருமித்து தீதில்லாத ஒரு
கருமத்தையே செய்வார்கள்.
7. கடலே அனையம் யாம் கல்வியால் என்னும்
அடலேறு அனைய செருக்கு ஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்.
பொருள்: பெரிதாக முழங்கிக் கொண்டிருந்த குளிர்ந்த கடல் நீரை
முனிவர்க்கெல்லாம் அரசராகிய அகத்தியர் தம் கையாலேயே
குடித்து வற்றச் செய்து விட்டார். எனவே நாம் கற்ற கல்வி கடல்
போன்றதானாலும், கர்வம் வந்து விட்டால் அது ஆண் சிங்கம்
போன்று நம்மைத் தள்ளி விடும்.
8. உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினம் காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம் கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு?
பொருள்: திரண்டு வரும் வெள்ளத்தை எப்போதும் கடந்து விடாமல்
கரையானது காத்து விடும், கரையைத் தாண்டி வெள்ளம் ஊருக்குள்
புகுவது என்பது அரிதானது. அது போல உள்ளத்திலிருந்து
பொங்கிவரும் கோபத்தை மனத்தில் அடக்கிக் கொள்வதே சிறந்த
குணம்.
9. மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத் தாம் மருவில் - பலியேல்
கடவுள் அவிர் சடைமேல் கட்செவி அஞ்சாதே
படர் சிறையப் புள் அரசைப் பார்த்து.
பொருள்: அன்பர்கள் படைக்கும் பலியை ஏற்றுக்கொள்ளும் சிவனது
விரிந்த சடையின் மேல் இருக்கும் பாம்பு, படர்ந்த சிறகுடைய
கருடனைப் பார்த்து அஞ்சாது. அது போல மெலிந்தோர்
வலிந்தோரை அண்டி விட்டால், பலம் மிகுந்த தன் எதிரியிடம்
பயப்படத் தேவையில்லை.
10. தங்குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதாது உலகில்
நிறை இருளை நீக்கும் மேல் நின்று.
பொருள்: நிலவானது தன்னிடமிருக்கும் கறையான இருளை நீக்கிக்
கொள்வது பற்றி நினைக்காது, மேலே நின்று உலகில்
படர்ந்திருக்கும் இருளைப் போக்கவே நினைக்கும். அது போலவே
உயர்ந்தோரும் தன் குறைகளையும், கஷ்டங்களையும் பற்றி
நினையாது, தளர்ந்து தன்னிடம் வந்து பிறர்க்கூறும் கஷ்டங்களைத்
தீர்த்து வைப்பர்.
11. பொய்ப் புலன்கள் ஐந்து நோய் புல்லியர் பால் அன்றியே
மெய்ப்புலவர் தம்பால் விளையாவாம் - துப்பின்
சுழற்றும் கொல் கல்தூணைச் சூறாவளி போய்ச்
சுழற்றும் சிறுபுன் துரும்பு.
பொருள்: சூறாவளியால் சிறு துரும்பை சுழற்றித் தூக்கி எறிய
முடியுமே அன்றி கல்தூணிடம் அதன் பலம் செல்லாது.
அதுபோலவே பொய்யான நமது ஐம்புலன்களும் மெலிந்தோரிடமே
துன்பங்களை உண்டாக்குமே அன்றி மெய்யறிஞர்களை அதனால்
ஒன்றும் செய்து விட முடியாது.
12. வருந்தும் உயிர் ஒன்பான் வாயில் உடம்பில்
பொருந்துதல் தானே புதுமை - திருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறு குடத்து நில்லாது
வீதலோ? நிற்றல் வியப்பு.
பொருள்: திருத்தமான அணிகலன்களை உடையவளே! குளிர் நீர்
பொத்தல் உள்ள குடத்தில் நிற்காது வெளியே ஒழுகிவிடுவது
வியப்பல்ல, அந்த ஓட்டைக்குடத்திலேயே அது தங்கியிருந்தால்
அதுவே வியப்பு. அது போல ஒன்பது ஓட்டைகளுள்ள இந்த
உடம்பில் வெளியேறிவிடாமல் உயிர் இருந்து கொண்டிருக்கிறதே
அதுவே வியப்பு.
13. பெருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் - சுரக்கும்
மலையளவு நின்ற முலை மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
பொருள்: மலைபோன்ற கொங்கைகளை உடையவளே! நிலவின்
கிரணங்கள் அதன் கலைகளைப் பொறுத்து ஏறி, இறங்கும். அது
போலவே மேலோர், கூடிக், குறையும் தன் செல்வச் செழிப்பை
ஒட்டி விருப்பத்தோடு பிறர்க்கு உதவுவர்.
14. தொலையாப் பெரும் செல்வந் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் இலையால்
இரைக்கும் வண்டு ஊதும் மலர் ஈரங்கோதாய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.
பொருள்: ரீங்காரம் செய்யும் வண்டு மொய்க்கும் மலர்களை
அணிந்தவளே! தொலையாத செல்வத்தை மேரு மலையை விட
அதிகமாக சேர்த்து விட்டோம் என்று செருக்கு மேலோரிடம்
இருப்பதில்லை.
15. இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் நல்லாய்
மொழியிலார்க்கு ஏதுமுது நூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு.
பொருள்: நல்ல குணமுடையவளே! ஊமைகளுக்கு பழம்பெரும்
நூல்களால் என்ன பயன்? குருடர்களுக்கு விளக்கால் என்ன
பயன்? அது போலவே அன்பு இல்லாதவர்க்கு இங்கு இடம்,
பொருள், ஏவல், இன்னும் மற்றெதெல்லாம் இருந்தும் என்ன பயன்?
16. தம்மையும் தங்கள் தலைமையையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் - தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செல்லாதோ கடல்.
பொருள்: கடலானது தன்னை அடுத்த உப்பங்கழியிலும் பாய்வது
போல, உயர்ந்தோர் மதியாதவராயினும், இழிந்தவராயினும் தன்னை
அண்டினவரை தன்னையும், தன் நிலையையும் ஆராய்ந்து அவர்
தம் துன்பம் தீர்ப்பர்.
17. எந்தை நல்கூர்ந்தான் இரப்பார்க்கு ஈந்து என்றவன்
மைந்தர் தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீ!
நின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்
கன்றும் உதவும் கனி.
பொருள்: பசும்பொன்னாலான வளையல்களை அணிந்தவளே!
வாழ்ந்திருந்து எல்லாருக்கும் உதவி, அழிந்த வாழையின் கீழ்
தோன்றிய அதன் கன்றும் எல்லாருக்கும் கனி, காய், இலை, தண்டு
இவைகளைத் தந்து உதவவே செய்யும், அது போலவே பிறர்க்குக்
கொடுத்து வறுமை எய்திய தகப்பனுக்குத் தோன்றிய மைந்தர்களும்
ஈகை குணத்தோடே இருப்பர்.
18. இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன் செய்
அதிர் வளையாய்! பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல்.
பொருள்: பொன்னால் செய்த, ஒலிக்கும் வளையல்களை
உடையவளே! வெம்மையான கதிர்களை உடைய சூரியன் வரவால்
கடல் பொங்குவதில்லை, குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரன்
வரவாலேயே மகிழ்ந்து பொங்குகிறது. அது போலவே நீரால்
சூழப்பட்ட இவ்வுலகும் இன்சொல்லாலேயே மகிழுமே அன்றி,
வன்சொல்லால் மகிழாது.
19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண்டு இன்புறீஇ
அல்லோர் வரவான் அழுங்குவர்- வல்லோர்
திருந்தும் தளிர் காட்டி தென்றல் வரத் தேமா
வருந்தும் சுழற்கால் வர.
பொருள்: தென்றல் வரும்போது தளிர் காட்டி மலர்ந்து வளரும்
தேங்கனிகளைக் கொண்ட மாமரம், சுழல் காற்று வந்தால் வருந்தும்.
அது போல வல்லவர்களும் நல்லோர் வரவால் மலர் முகம்
கொண்டு மகிழ்வர், மற்றோர் வந்தால் புழுங்குவர்.
20. பெரியவர் தம்நோய் போல் பிறர் நோய் கண்டு உள்ளம்
எரியின் இழுது ஆவர் என்க - தெரி இழாய்
மண்டு பிணியால் வருந்தும் பிற உறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.
பொருள்: தேர்ந்தெடுத்த அணிகளை அணிந்திருப்பவளே! முற்றிய
நோயால் வருந்தும் பிற உறுப்புகளைக் கண்டு நீர் சொரியும் கண்
போல, பெரியோர் பிறர் படும் கஷ்டங்களைக் கண்டு
நெருப்பிலிட்ட நெய் போல் உருகுவர்.
21. எழுத்து அறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும்
எழுத்து அறிவார்க் காணின் இலையாம் - எழுத்து அறிவார்
ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்ட அளவில்
வீயும் சுரநீர் மிகை.
பொருள்: கற்றோர் ஆராய்ந்து தேடும் சிவபெருமானின்
ஜடாமுடியைக் கண்டதும் கங்கையின் பெருக்கு ஒடுங்கி விடுவதைப்
போல, மெய் ஞானியர் முன் ஏனையோர் கற்ற கல்வி அனைத்தும்
இல்லாது போய் விடும்.
22. ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க - நீக்கு
பவர் யார்? அரவின் பருமணி கண்டு என்றும்
கவரார் கடலின் கடு.
பொருள்: பாம்பிடம் தோன்றிய மணி என்றும், பாற்கடலில்
தோன்றிய விஷம் என்றும் கொள்வார் எவருமிலர். எனவே
உயர்த்துகின்ற அறிவைக் கொள்ளாது பிறப்பினால் உயர்வு தாழ்வு
பார்க்க வேண்டாம்.
23. பகர்ச்சி மடவார் பயில நோன்பு ஆற்றல்
திகழ்ச்சி தரு நெஞ்சத் திட்பம் - நெகிழ்ச்சி
பெறும் பூரிக்கின்ற முலைப் பேதாய்! பலகால்
எறும்பு ஊரக் கல் குழியுமே!
பொருள்: பூரித்திருக்கும் தனங்களை உடையவளே! பலகாலம்
எறும்பு ஊரக் கல் குழிந்து விடும். அது போல ஆண்களுடன்
பேசிக் கொண்டிருந்தாலே, பெண்களுக்குப் பெருமையளிக்கும் கற்பு
எனும் நோன்பு கொள்ளும் நெஞ்சுறுதி தளர்ந்து விடும்.
24. உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்
கொண்டு புகல்வது அவர் குற்றமே - வண்டு மலர்ச்
சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பு அன்றோ
காக்கை விரும்பும் கனி.
பொருள்: செழித்திருக்கும் சோலைப்பூக்களை வண்டு போய்ச்
சேரும், ஆனால் காக்கை வேப்பம்பழத்தையே விரும்பும்.
அதுபோல ஒருவரிடம் குணம் இருந்தாலும் கீழோர் பெரிதாகக்
கூறுவது அவர் குற்றங்களையே.
25. கல்லா அறிவிற் கயவர்பால் கற்று உணர்ந்த
நல்லார் தமது கனம் நண்ணாரே - வில்லார்
கணையிற் பொலியும் கருங்கண்ணாய்! நொய்தாம்
புனையில் புகும் ஒண் பொருள்.
பொருள்: வில் போன்ற புருவங்களை உடைய கரு விழியாளே!
பெரும் பாரமுள்ள பொருளும், தெப்பத்தில் சேர்ந்தால் தன் வலிமை
குறைந்து விடுவதைப் போல, கல்வியறிவு இல்லாத கீழோரிடம்
சேர்ந்த உயர்ந்தோர் பெருமையும் வலுவில்லாததாகி விடும்.
26. உடலின் சிறுமை கண்டு ஒண் புலவர் கல்விக்
கடலின் பெருமை கடவார் - மடவரால்
கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்
விண் அளவாயிற்றோ விளம்பு.
பொருள்: மடந்தையே! கதிரவனின் ஒளியின் அளவு நம் கண்
அளவா அல்லது விண் அளவா கூறு. அது போலவே
புலவர்களும் ஒருவர் உடல் சிறுமையைக் கொண்டு அவர்கள்
கல்விக் கடலின் அளவை அலக்ஷ்யம் செய்யார்.
27. கைம்மாறு உகவாமல் கற்று அறிந்தோர் மெய் வருந்தித்
தம்மால் இயல் உதவி தாம் செய்வர் - அம்மா
முளைக்கும் எயிறு முதிர் சுவை நாவிற்கு
விளைக்கும் வலியன தாம் மென்று.
பொருள்: முளைக்கும் பற்களானது கடினமான பொருள்களையும்
தான் மென்று நல்ல சுவையை நாவிற்குக் கொடுக்கும். அது
போலவே கற்றோரும் தன் மெய் வருத்தி, ப்ரதியுபகாரம் கருதாது
பிறர்க்கு உதவிடுவர்.
28. முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளம்
கனிவினும் நல்கார் கயவர் - நனி விளைவில்
காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
ஆயினும் ஆமோ அறை.
பொருள்: நன்கு பழுக்காத காயாக இருந்தாலும் வாழை
உணவுக்காகும். பழுத்திருந்தாலும் எட்டி உணவுக்காகுமோ சொல்.
அது போலவே கற்றோர் தம்மிடம் கோபம் கொண்டோருக்கும்
கொடுப்பர், ஆனால் மற்றோர் அவரிடம் கனிவாகப்
பேசுபவருக்கும் எதையும் கொடுக்க மாட்டார்.
29. உடற்கு வரும் இடர்நெஞ்சு ஓங்குபரத்து உற்றோர்
அடுக்கும் ஒரு கோடியாக - நடுக்கமுறார்
பண்ணிற் புகலும் பனிமொழியாய் அஞ்சுமோ
மண்ணிற் புலியை மதிமான்.
பொருள்: இசையை ஒத்த குளிர்ந்த பேச்சுடையவளே! நிலவில்
இருக்கும் மான் பூமியில் இருக்கும் புலிக்கு அஞ்சுமோ? அது
போல நெஞ்சத்தை உயர்ந்த பரம்பொருளிடம் வைத்தோர் உடலுக்கு
ஒரு கோடி துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும் கவலைப்பட
மாட்டார்கள்.
30. கொள்ளும் கொடும் கூற்றம் கொள்வான் குறுகுதல் முன்
உள்ளங் கனிந்து அறம் செய்து உய்கவே - வெள்ளம்
வருவதற்கு முன்னர் அணை கோலி வையார்
பெருகுதற் கண் என் செய்வார் பேசு.
பொருள்: வெள்ளம் வருவதற்கு முன் அணை போட்டு வைக்காதவர்
பெருக்கெடுத்து வெள்ளம் வரும்போது என்ன செய்வார் கூறு. அது
போலவே உயிரைக் கொள்ளும் யமன் வருவதற்கு முன்பே
மனங்கனிந்து அறம் செய்து பிழைத்துக் கொள்ள வேண்டும்.
31. பேரறிஞர் தாக்கும் பிறர்துயரம் தாங்கியே
வீரமொடு காக்க விரைகுவார் - நேரிழாய்
மெய்சென்று தாக்கும் வியன்கோல் அடிதன் மேல்
கை சென்று தாங்கும் கடிது.
பொருள்: பொருந்திய அணிகளை உடையவளே! உடலின் மேல்
பெரிய குச்சியின் அடி விழுவதற்கு முன் கையானது விரைந்து
சென்று தன் மேல் வாங்கிக் கொள்ளும். அது போல
பேரறிஞர்களும் பிறர் துன்பங்களைத் தாங்க வீரத்தோடு விரைவார்.
32. பன்னும் பனுவல் பயன்தேர் அறிவிலார்
மன்னும் அறங்கள் வலியிலவே - நன்னுதால்!
காழ் ஒன்று உயர் திண் கதவு வலியுடைத்தோ
தாழ் ஒன்று இலதாயில் தான்.
பொருள்: வைரம் பாய்ந்த திண்மை கொண்ட உயர்ந்த கதவும்
தாழ்ப்பாள் இல்லையென்றால் வலுவில்லாததே. நன்னெறிகளை
உடையவளே! அது போல சொல்லப்படும் நூல்களின் பயனை
அறியாதவர் செய்யும் அறங்களும் பயனற்றதே.
33. எள்ளாது இருப்ப இழிஞர் போற்றற்கு உரியர்
விள்ளா அறிஞர் அது வேண்டாரே - தள்ளாக்
கரை காப்பு உளது நீர் கட்டு குளம் அன்றிக்
கரை காப்பு உளதோ கடல்.
பொருள்: நாம் கட்டும் குளத்திற்கு நீர் தளும்பாது இருக்க கரை
கட்டுகிறோம். ஆனால் கடலுக்குக் கரை கட்டுவதில்லை. அது
போல நம்மை தூற்றாதிருப்பதற்காக இழிந்தவர்களைப் போற்றிக்
கொண்டிருக்கலாம். ஆனால், குறைவற்ற அறிவுடையோருக்கு
அந்த போற்றுதல் தேவையில்லை.
34. அறிவுடையார் அன்றி அது பெறார் தம்பால்
செறி பழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்
வண்ணம் செய்வாள் விழியே அன்றி மறை குருட்டுக்
கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.
பொருள்: பிறை போன்ற நெற்றியை உடையவளே! அழகு தரும்
ஒளி பொருந்திய விழி இருளைக் கண்டு அஞ்சும். குருட்டுக் கண்
இருளுக்குப் பயப்படுவதில்லை. அது போல அறிவுடையோர்
அன்றி அறிவு இல்லாதவர் தம்மைச் சேரும் பழியைக் கண்டு அஞ்ச
மாட்டார்.
35. கற்ற அறிவினரைக் காமுறுவர் மேன்மக்கள்
மற்றையர் தாம் என்றும் மதியாரே - வெற்றி நெடும்
வேல் வேண்டும் வாள் விழியாய்! வேண்டா புளிங்காடி
பால் வேண்டும் வாழைப்பழம்.
பொருள்: வெற்றிதரும் நீண்ட வேல், என்னைப் பழிக்காதே என்று
வேண்டிக்கொள்ளும் விழியாளே! வாழைப்பழம் பாலை வேண்டும்,
புளியம்பழம் பாலை விரும்புவதில்லை. அது போல மேன்மக்களே
கற்றோரை விரும்புவர், மற்றவர் மதிப்பதில்லை.
36. தக்கார்க்கே ஈவர் தகார்க்கு அளிப்பார் இல்என்று
மிக்கார்க்கு உதவார் விழுமியோர் - எக்காலும்
நெல்லுக்கு இறைப்பதே நீரன்றிக் காட்டுமுளி
புல்லுக்கு இறைப்பாரோ போய்.
பொருள்: எப்போதும் நெல்லுக்கு நீரை இறைப்போமே அன்றி
காட்டில் வளரும் புல்லுக்கு இறைப்பதில்லை. அது போல
உயர்ந்தோர் தகுதியுள்ளோருக்கே உதவுவர்.
37. பெரியார் முன் தன்னைப் புகழ்ந்து உரைத்த பேதை
தரியாது உயர்வு அகன்று தாழும் - தெரியாய் சொல்
பொன் உயர்வு தீர்த்த புணர் முலையாய்! விந்தமலை
தன் உயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
பொருள்: லக்ஷ்மிதேவியை அழகில் வென்றவளே! அகஸ்திய
முனிவர் முன் உயர்வு பேசிய விந்திய மலை அன்று தாழ்ந்து
போயிற்று. அது போல பெரியோர் முன் தன்னைப் புகழ்ந்து
பேசிக்கொள்ளும் மூடனும் உயர்வு நீங்கித் தாழ்வான்.
38. நல்லார் செய்யும் கேண்மை நாள்தோறும் நன்றாகும்
அல்லார் செய்யும் கேண்மை ஆகாதே - நல்லாய் கேள்
காய் முற்றின் தின்தீங் கனியாம் இளம் தளிர் நாள்
போய் முற்றின் என் ஆகிப் போம்.
பொருள்: நல்லவளே கேள்! காய் முற்றினால் உண்பதிற்கு இனிய
கனியாகும். இளந்தளிர் முற்றி என்ன ஆகப்போகிறது? அது
போல நல்லோர் சேர்க்கை நாள்தோறும் நல்லதே. ஆனால் தீயோர்
சேர்க்கை அப்படி ஆகாது.
39. கற்று அறியார் செய்யும் கடுநட்பும் தாம்கூடி
உற்றுழியும் தீமை நிகழ்வு உள்ளதே - பொற்றொடீஇ
சென்று படர்ந்த செழுங்கொடி மென் பூ மலர்ந்த
அன்றே மணமுடைய தாம்.
பொருள்: பொன் வளையல்களை அணிந்தவளே! சென்று படர்ந்த
செம்மையான கொடியில் மலர்ந்த மலருக்கு மலர்ந்த ஒரு தினமே
மணமிருக்கும். அது போல கல்லாதோரோடு செய்யும் ஆழ்ந்த
நட்பும் சேர்ந்து இருந்தாலும் தீமையையே கொடுக்கும்.
40. பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண்.
பொருள்: பொன் போன்றவளே! மின்னும் அணிகலன்களை
அணிந்திருந்தாலும் எந்த உறுப்புகளும், எதையும் அணியாத
கண்ணுக்கு ஒப்பாவதில்லை. அது போலவே பொன் அணியும்
வேந்தர்களும் அதை அணியாத பெருங்கல்வி உடைய அறிஞருக்கு
ஒப்பாகார்.